குடிநீர் வராததால் கண்டித்து சாலை மறியல்

82பார்த்தது
*புலிகுட்டை கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல்! கல்லூரி வாகனங்கள் சாலையில் நின்றதால் மாணவர்கள் கடும் அவதி! சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்! *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புலிகுட்டை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன

இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால்

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் முக்கிய பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் சாலையில் நின்றன இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இருந்தபோதிலும் சமாதானம் ஆகாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி