ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.