ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

நிலத்தகராறில் கத்திக்குத்து - போலீஸ் விசாரணை!

நிலத்தகராறில் கத்திக்குத்து - போலீஸ் விசாரணை!

சோளிங்கரை அடுத்த பனவட்டம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினையில் தகராறு இருந்து வந்தது. நேற்று(செப்.15) இரவு அவர்களுக்கிடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் முற்றியது. அப்போது பச்சையப்பன் தனது ஆதரவாளர்களை வரவழைத்தார். இந்த நிலையில் அவர்கள் சேட்டுவின் உறவினர்களான குணவதி (25), சாந்தி (40), விஜயகுமார் (40), வெங்கடேசன் (17), பழனி (45), கோமதி (19) ஆகிய 6 பேரை கத்தி மற்றும் இரும்புக்கம்பியால் தாக்கினர். இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் காயம் அடைந்து அலறினர். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்த குணவதி, சாந்தி, பழனி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி கத்தி, இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு ஓடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా