ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருவாசக பக்தி பாடல்களை பாடி சிவனை வழிபட்டனர்.
தொடர்ந்து 24 மாதங்களாக திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.