ராணிப்பேட்டையில் குடிமை பணி தேர்வு எழுதவுள்ள 2, 654 பேர்!

57பார்த்தது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு (தொகுதி 1) வருகிற 13-ந் தேதி சனிக்கிழமை நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நடக்கவுள்ள நிலையில் 2, 654 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்த தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு www. tnpsc. gov. in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும். தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி