பேரணாம்பட்டு: தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை!

83பார்த்தது
பேரணாம்பட்டு: தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருேக மேல்பட்டி கிராமம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் டெய்லர் சீனிவாசன் (55). இவருக்கு மீரா என்ற மனைவியும். 2 மகள்கள். ஒரு மகள் உள்ளனர். சீனிவாசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவரை பிரிந்து மீரா குழந்தைகளுடன் சென்று விட்டார்.

இந்த நிலையில் சீனிவாசன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு போதிய பராமரிப்பின்றி சிரமத்துடன் வாழ்ந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சீனிவாசன் சந்தைமேடு பகுதியில் உள்ள அரச மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சீனிவாசனின் மகன் சதீஷ்குமார் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி