குடியாத்தம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை

52பார்த்தது
குடியாத்தம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கோவில் பூசாரி தேவராஜ். இவரது மனைவி வேண்டா (60). இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக்கண்ட உறவினர்கள் பரதராமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கே. வி. குப்பம் இன்ஸ்பெக்டர் நிர்மலா உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி