மது, சாராயம் விற்ற 14 பேர் கைது!

52பார்த்தது
மது, சாராயம் விற்ற 14 பேர் கைது!
வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் 200 லிட்டர் சாராய ஊறல், 5 லிட்டர் சாராயம், 3 லிட்டர் கள், 15 மதுபாட்டில்கள், 250 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. மது, சாராயம் விற்ற வழக்கில் 14 பேரும், குட்கா விற்ற வழக்கில் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி