வேலூர் பெருமுகைப் பகுதியில் மனு நீதி நாள் முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு 66 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.