வள்ளிமலை கோவில் உண்டியல் வருமானம் ரூ. 10.97 லட்சம் வசூல்

50பார்த்தது
வேலூர் வள்ளிமலை சுப்ரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவின் போது கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கருணாநிதி தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

செயல் அலுவலர் திருநாவுக்கரசு, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ. 10 லட்சத்து 97 ஆயிரத்து 871 மற்றும் 10.5 கிராம் தங்கம் 324 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

தொடர்புடைய செய்தி