காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜர்

71பார்த்தது
காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜர்
காட்பாடியை அடுத்த வண்டறதாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொது சொத்தை ரவுடி ஜானி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இடையொட்டி கடலூரில் இருந்து ஜானி வளர்த்த போலீஸ் காவலுடன் வானில் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார் இதை அடுத்து ஜானி வளர்த்த காவலுடன் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி