பெருமாள் தங்க பாதம் திருக்குடை ஊர்வலம்!

55பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராமன் ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை கமிட்டியினர் மற்றும் விஷ்வ இந்து பரிசத் சார்பாக திருக்குடை மற்றும் பெருமாள் தஙக பாதம் ஊர்வலம் சந்தப்பேட்டை சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து பஜனை பாடல்கள் மற்றும் கோலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று பிச்சனூர் பேட்டையில் உள்ள தென் திருப்பதி கோயிலுக்கு வந்தடைந்தது.

மேலும் அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று நிரைவாக திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் பாதம் மற்றும் திருக்குடைகள் ஒப்படைக்கப்படும்.

ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஊர்வலத்தை முன்னிட்டு குடியாத்தம் நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி