திருவலம் பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு

52பார்த்தது
வேலூர் மாவட்டம்

*வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக திருவலம் பகுதியில் வசித்து வரும் மக்கள் வீட்டு மனைபட்டா கோரி 36 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்*


வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவலம் புதுத்தெருவில் வசிக்கும் 36 குடும்பங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தனர் அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புறம் போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு பட்டாவை நாங்கள் வசிக்கும் அதே வீடுகளுக்கு வழங்குமாறு கோருகிறோம் என கூறி புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சங்கத்தின் சார்பாக இலவச பட்டா மனை கேட்டு மாநில தலைவர் வேல்முருகன் மாநில துணைத்தலைவர் சிவானந்தம் திருவலம் பேரூராட்சி மகளிர் அணி தலைவி குப்பம்மாள் மற்றும் பாஞ்சாலை மல்லிகா, சௌந்தரி பவானி சாந்தி பாக்கியம் மற்றும் பலர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியிடம் மனுக்கள் கொடுத்தனர்


*பேட்டி: குப்பம்மாள் (திருவலம் பகுதியை சேர்ந்தவர்)*

தொடர்புடைய செய்தி