புதிய நியாய விலை கடை கட்டுவதற்கு எதிர்ப்பு

66பார்த்தது
வேலூர் மாவட்டம் சேனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜி. என். நகர், இந்திரா நகர், ஜே. பி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன இந்த பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இப்பகுதியில் அரசு புதிய நியாய விலை கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு அரசு நியாய விலை கடை தற்போது ஜி. என் நகர் பகுதியில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு இன்று கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் இளைஞர்கள் பொதுவான இடத்தில் அரசு நியாய விலை கடையை கட்டித் தர வேண்டும் ஏனென்றால் ஜி. என் நகர் பகுதிக்கு வருவதற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதாகவும் மேலும் இந்த பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பெண்கள் இந்த பகுதிக்கு வருவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி