காட்பாடி அருகே ஒரு லட்சம் வழிப்பறி

3340பார்த்தது
காட்பாடி அருகே ஒரு லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி வள்ளிமலை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (68). இவா் வியாழக்கிழமை இரவு தனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வாடகை பணம் வசூலித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது இவரை பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா்கள், மணி வீட்டுக்கு உள்ளே சென்றபோது அவரிடமிருந்து ரூ. ஒரு லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா். அக்கம் பக்கத்தினா் விரட்டி பிடிப்பதற்குள் அவா்கள் தப்பி சென்று விட்டனராம்.

இது குறித்து மணி அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி