குடிக்க பணம் தராததால் பெயிண்ட் தூக்கிட்டு தற்கொலை!

553பார்த்தது
வேலூர் அடுத்த தண்டல கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (39). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான பாபு மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி பணம் கொடுக்க மறுக்கவே பாத்திரமடைந்த பாபு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கில் கணவன் தொங்குவதை பார்த்த பாபுவின் மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்த தகவலறிந்த விருதம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி