சேகர் ரெட்டியின் வீட்டிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்

57பார்த்தது
வேலூர் மாவட்டம்

*அனைத்து பத்திரிகையாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என காட்பாடியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆவேசம்*

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11. 07. 2024 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ். பி வேலுமணி இன்று
காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று உயிரிழந்தவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


*அதன் பின்னர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் காவிரி தொடர்பான பிரச்சனை குறித்து கேள்வி கேட்டனர்*

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றார்

*பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து போவது என மீண்டும் செய்தியாளர்கள் கேட்டனர்*


அதற்கு எஸ். பி. வேலுமணி பத்திரிகையாளர்கள் பார்த்து நான் பயப்படுவதில்லை அனைத்து ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதை எப்பொழுது போட்டீர்கள் என்று ஆவேசமாக கூறிவிட்டு காரில் வேகமாக நடுவிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி