சிலம்பம் போட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

62பார்த்தது
சர்வதேச இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் கோவா மார்கோ மனோகர் பாரிக்கர் ஸ்டேடியத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி கடந்த 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர், நேபால், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வேலூர் சாஸ்திரி நகரில் உள்ள சிலம்பாட்டம் குழுவின் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 53 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், வேல்கம்பு, சுருள்வால், குத்துவரிசை, மான்கொம்பு உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 45 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை தட்டி சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை போற்றும் விதமாக காட்பாடி ரயில் நிலைம் வந்த மாணவர்களை ஆசான்கள், பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி