தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

1056பார்த்தது
வாலாஜா ரயில் நிலையத்திற்கும் சோளிங்கர் ரயில் நிலையத்திற்கும் இடையே ஆண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இறந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் தண்டவாளத்தை கடக்கும் பொழுது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா வரை செல்லும் சரக்கு ரயில் மோதி இறந்துள்ளார். அவருடைய உடல் அங்கிருந்து 50 மீட்டர் தூரம் வரை ரயில் இழுத்து சென்றுள்ளது. இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி