காட்பாடி அருகே மின் கசிவின் காரணமாக மரக்கடையில் தீ விபத்து

561பார்த்தது
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் வேலூரை சேர்ந்த ராஜ் பட்டேல் என்பவருக்கு சொந்தமான கீதா பிளைவுட் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று கடையின் உள்ளே இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் கடைக்கு வந்த உரிமையாளர் உள்ளே திறந்து பார்த்தபோது கடையில் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் உள்ளே இருக்கும் பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் என்பதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி