ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் கைது

71பார்த்தது
காட்பாடி செங்குட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இவர் கடந்த எட்டாம் தேதி வாடகை பணம் ரூபாய் ஒரு லட்சத்தை வசூல் செய்து வீட்டில் வைத்தார். இதனை நோட்டமிட்ட ஒரு பெண் உட்பட 3 மர்ம நபர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தனர். அவர்கள் மணியிடம் ஆவணங்கள் கேட்பது போல் விசாரித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வீட்டுக்குள் இருந்த செல்போனை எடுக்க சென்றார். இந்த நேரத்தில் அவர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தை மூன்று பேரும் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மணி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் திருட்டு ஈடுபட்டது. வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி கே வி குப்பத்தை சேர்ந்த மோனிஷா கலவையை சேர்ந்த மோகன் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் காட்பாடி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி