மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை!

54பார்த்தது
மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை!
திருப்பத்தூர் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன.

அவற்றை திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனர்.

வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ரூ. 45 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி