ஜோலார்பேட்டை: மது விற்ற முதியவர் கைது!

65பார்த்தது
ஜோலார்பேட்டை: மது விற்ற முதியவர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பால்னாங்குப்பம் அருகே சென்றபோது, பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி