மேல்பாடி அருகே பாம்பு கடித்து பெண் பலி

4475பார்த்தது
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த வள்ளிமலை தேரடி வீதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி உமா மகேஸ்வரி இவர் இப்பகுதியில் சோடா வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சம்பவதினத்தன்று இரவு உமா மகேஸ்வரி தனது வீட்டின் பின்புறத்திற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது விஷப்பாம்பு ஒன்று இவரை கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்தவரை குடும்பத்தினர் உறவினர்கள் மீது மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று (02.03.2024) பரிதாபமாக பலியானார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி