மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

85பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே மாம்பாக்கம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் அசோக் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், பழைய அட்டை புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுப்பிரமணி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் பியூலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி