பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை கொடியேற்று விழா!

54பார்த்தது
பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை கொடியேற்று விழா!
தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை கொடி ஏற்றுவிழா ஆற்காடு அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் நடைபெற்றது. பா. ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் தலைமை தாங்கினார்.

மாநில அமைப்பாளர் கவிதா, சட்ட ஆலோசகர் உமாமகேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. வி. பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். சேட்டு மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன், ஏ. எம். வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழிலாளர் பேரவை கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பணிமனை செயலாளர் மோகனவேலு, பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் அசோகன், மற்றும் மாநில, வேலூர் மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி