ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு அம்பேத்கர் நகரில் உள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு இலவச நோட்டு புத்தகம் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி இலவச நோட்டு புத்தகம் எழுது பொருட்களை வழங்கினார்.