அணைக்கட்டு: கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து!

2559பார்த்தது
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வேலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு கார் ஒன்று சென்றது. பள்ளிகொண்டாவை அடுத்த சின்னசேரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கன்டெய்னர் லாரியை, கார் முந்தி செல்ல முயன்ற போது, கார் மீது லாரி மோதி பல அடி தூரத்திற்கு காரை இழுத்துச் சென்றது.

மேலும், கார் மற்றும் லாரி தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் ஏறி நின்றது. லாரி டிரைவர் சாதுர்யமாக நிறுத்தியதால் எதிர்திசையில் சென்று விபத்து ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சென்று கிரேன் மூலம் கார் மற்றும் லாரியை மீட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி