அணைக்கட்டு: சுற்றுலா வந்த கல்லூரி மாணவி மாயம்!

75பார்த்தது
சென்னையில் உள்ள ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் இருந்து முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவ- மாணவிகளை பஸ்களில் அழைத்து சென்றனர். வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனவியல் கல்லூரி சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதற்காக நேற்று இரவு பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பேருந்து நிலையம் அருகே இரவு சுமார் 11 மணியளவில் பேருந்துகளை நிறுத்திவிட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் டீ சாப்பிடுவதற்காக கீழே இறங்கியுள்ளனர்.

பின்னர் டீ அருந்திவிட்டு மீண்டும் அனைவரும் திரும்பிய போது சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கோவர்த்தினி (19) என்பவர் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற மாணவர்கள் மாணவியைத் தேடிச் சென்றபோது அவரை யாரோ காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் வளர்மதி உடனடியாக அருகில் உள்ள பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பள்ளிகொண்டா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாணவி கடத்திச் செல்லப்பட்டாரா? அல்லது காதலித்து காதலனுடன் சென்று விட்டாரா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி