இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!

2565பார்த்தது
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பிச்சாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவரின் மனைவி பவித்ரா (30). இவர்களது குழந்தைகள் ரித்திக் (9), நித்திகா ஸ்ரீ (7) ஆகிய மூன்று பேர் வீட்டிற்க்கு அருகே உள்ள கிணற்றில் தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்குவதற்காக தாய் பவித்ரா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய கிணற்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தாய் பவித்ரா உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மூவரின் உடலை ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் தேடி மீட்டனர். பின்னர், உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி