கழுதை மீது சாம்பல் அடித்து வினோதமான சடங்கு நிகழ்வு!

74பார்த்தது
கழுதை மீது சாம்பல் அடித்து வினோதமான சடங்கு நிகழ்வு!
புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள விராலுர் குரும்பச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்கு முன்பு 18 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் சாம்பல் அடிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வேடமணிந்து ஊர்வலமாக வந்து கோவில் அருகே உள்ள குளக்கரையில் இறுதி சடங்கை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கழுதை மீது ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருவரை மேலே ஏற்றி அவர்கள் மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வானது நடைபெற்றது. இன்றிரவு குரும்பச்சி அம்மனுக்கு காப்பு கட்டி அதனைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒவ்வொரு சமூகத்தையும் சார்ந்தவர்களும் பூஜை செய்து 22ஆம் நாளன்று அனைத்து சமூகத்தினரும் ஜாதி, பேதம் இன்றி திருவிழா கொண்டாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி