சத்துணவு மைய உணவு பொருட்களை மூட்டை கட்டி அனுப்பும் வீடியோ!

65பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இயங்கி வரும் ஒரு மேல் நிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வழங்கப்பட வில்லை என புகார் எழுந்தது. இது குறித்து ஒன்றிய ஆணையாளர் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவிற்கான அரிசி, மளிகை உள்ளிட்ட உணவு பொருட்களை சத்துணவு மையத்தில் இருந்து செய்து மூட்டைக் கட்டி இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களிடம் கொடுத்து அனுப்பும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி