வேலூர் ஜெயில் மனநல ஆலோசகர் கைது!

57பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், அச்சமங்கலத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (24). இவர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு கைதிகள் மற்றும் ரவுடிகளுக்கு கைதிகளில் முன்னேற்றத்திற்காக சீர்திருத்தத்தின் சிறகுகள் என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 மாதங்களாக கைதிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க செல்லும்போது அருணாச்சலம், கைதிகள் கூறும் தகவலை தனது செல்போனில் அவரது உறவினர்கள் மற்றும் ரவுடிகளிடம் அவ்வப்போது தெரிவித்து வந்தார். காலப்போக்கில் அருணாச்சலத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் அருணாச்சலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி ஜெயிலர் அருள்குமரன், ஜெயிலுக்குள் ரோந்து சென்றார். அப்போது அருணாச்சலம் கைதிகளிடம் பேசிக்கொண்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். பின்னர் அவரது செல்போன்களை பறிமுதல் செய்து, அவர் யாரிடம் அதிக நேரம் பேசி உள்ளார்? , யார்? யாருக்கு? தொடர்ந்து போன் செய்துள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அருணாச்சலம், கைதிகள் கூறும் தகவலை அவரது உறவினர்கள் மற்றும் ரவுடிகளிடம் தெரிவித்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து ஜெயில் நிர்வாகம் சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி