திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் சவுரி முடி விற்பனை மற்றும் அவ்வப்போது பாம்புபிடி தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் குடியிருப்பு அருகில் உள்ள அன்வர் என்பவருக்கு சொந்தமான காலி மனையில் மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த கணேசன் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் அதிகமாக உள்ளதால் குழந்தைகளைக் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் மலைபாம்பை பிடித்து தீயிட்டு எரித்துள்ளார்.
பின்னர் இது குற்றம் என தெரிந்து பாம்பு பாதி எரிந்த நிலையில் விட்டு விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வனச்சரக அலுவலர் நாகா சதீஷ் கிடிஜாலா மற்றும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மலைப்பாம்பை பிடித்து எரித்த கணேசன் என்பவரை கைது செய்து அவர் மீது வன உயிரினம் இறப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.