முன்னாள் எம்எல்ஏ கார் மீது அரசு பஸ் மோதி விபத்து

1042பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் மேம்பாலத்தின் மீது பெங்களூர் - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை பெங்களூர் செல்லும் சாலையில் இருபுறமும் செல்லும் வாகனங்களை ஒரு வழிச்சாலையில் நடுவில் தடுப்புகள் வைத்து திருப்பிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனின் கணவர் பத்மநாபன் தனது காரில் ஆம்பூரில் இருந்து மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலுக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த கார் அங்குள்ள வளைவில் திரும்பியபோது, வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் ஒருபுறம் நொறுங்கிய நிலையில் கார் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்த்தபினர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நேரத்திற்கு பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து மாற்று பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி