கோழிப்பண்ணையில் தீ விபத்து பல லட்சம் நாசம்

63பார்த்தது
வாணியம்பாடி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.

வாணியம்பாடி, ஜூன். 29-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கவுக்காப்பட்டு கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மதியம் கோழிப்பண்ணையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தீயணைப்புத்துறையினர் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவியதால் பண்ணை தீயில் எரிந்து நாசமானது, தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி