யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடனும் செய்ய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இனி யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்படும்போது உங்களது பின் (PIN) நம்பருக்கு பதிலாக கைரேகை மற்றும் முக அங்கீகாரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இதனால் செல்போன் உரிமையாளர் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யமுடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் மோசடிகள் என்பது தடுக்கப்படும்.