போலீசாரை சரமாரியாக தாக்கிய இருவர்

63பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் ஊமையன் என்கிற விஜயன் (24) மற்றும் அவரது அண்ணன் தாமரைக்கண்ணன் (26). பூக்கடையில் வேலை செய்யும் இவர்கள் இருவரும், மது போதையில் அண்ணா சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளனர். அப்போது மழை நீரில் வழுக்கி விழுந்த இவர்களை அங்கு நின்றிருந்த ஊர்காவல் படையை சேர்ந்த நரேந்திர அர்ஜுன், முகிலன் ஆகியோர் அவர்களை மீட்டு எச்சரித்துள்ளனர். அப்போது விஜயன் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் காவலர்கள் என்றும் பாராமல் இருவரையும் அடித்து கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி