பேருந்து மீது லாரி மோதி விபத்து: 30 பேர் படுகாயம் (வீடியோ)

9165பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் இன்று (ஜூன் 16) பயங்கர சாலை விபத்து நடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கஜ்ரௌலாவில் இருந்து வேகமாக வந்த லாரி ஒன்று பயணிகள் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி