ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிகப்படியான கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.