முதலமைச்சருக்கு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

83பார்த்தது
முதலமைச்சருக்கு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம் கோரிக்கை
காவல்துறை - போக்குவரத்துக்கழக மோதல் போக்கினை தடுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பேருந்தில் ஏறி பயணம் செய்த காவல்துறை காவலர் பயணச்சீட்டு பெறாமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தெரியவந்தது. காவல் துறை காவலர்களுக்கு பேருந்து இலவச பயணம் கிடையாது என போக்குவரத்து துறையின் செய்தியும் வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை மறித்து காவல்துறை அபராதம் விதிக்கும் செய்திகளும் வந்துள்ளன. எனவே, அனைத்து இலவச பயண திட்டங்களின் முழு பயண கட்டணத் தொகைகளையும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி