மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல போக்குவரத்து கழகம் அறிவுரை

80பார்த்தது
மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல போக்குவரத்து கழகம் அறிவுரை
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024 ஜுன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை திறக்கப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகத்தால் 2023-24ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகள் சரியாக இயக்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி