மதுரை திருமங்கலம் முத்தாலம்மன் தெருவை சேர்ந்தவர் தவப்பாண்டி. இவரின் காருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சுங்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 690 ரூபாய் கட்ட வேண்டும் என மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.