ரயில் விபத்து.. மத்திய அரசுக்கு உதயநிதி வேண்டுகோள்

69பார்த்தது
ரயில் விபத்து.. மத்திய அரசுக்கு உதயநிதி வேண்டுகோள்
திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் மற்றொரு ரயில் வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பயணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ரயில் விபத்துகள் தொடர்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி