கன்னியாகுமரி கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

74பார்த்தது
கன்னியாகுமரி கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென் இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக குமரி கடல் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் முக்கடல் சங்கமம் சங்கிலி துறையில் இறங்கி யாரும் கால் நனைக்க கூடாது என காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அங்கு 24 மணி நேரம் செயல்படும் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி