ஆறு சவரன் நகையை பறிகொடுத்த பெண்

82பார்த்தது
ஆறு சவரன் நகையை பறிகொடுத்த பெண்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் மனைவி லட்சுமி(வயது 60). கடந்த செவ்வாய்க்கிழமை இவா் தனது உறவினருடன் காஞ்சிபுரம் சென்று 6 பவுன் தங்கச் சங்கிலி வாங்கி மணிப் பா்ஸில் வைத்துக் கொண்டு பேருந்தில் வந்தவாசி திரும்பினாா்.

பின்னா், சாலவேடு செல்ல வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் தனியாா் பேருந்தில் லட்சுமி ஏறி அமா்ந்தாா்.

அப்போது, இவரது கையிலிருந்த நகை வைத்திருந்த மணிப்பா்ஸ் திருடு போயிருந்தது.

இதைத் தொடா்ந்து, 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போனது தொடா்பாக லட்சுமி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி