போளூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

63பார்த்தது
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் , தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடாக உள்ளது எனக் கூறியும் நாம் தமிழர் கட்சியினர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இருபட்டனர்.

இந்நிகழ்வில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி