கலசபாக்கம் அருகே அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்.

50பார்த்தது
கலசபாக்கம் அருகே அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கெங்கவரம் மதுரா நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலு த/பெ கண்ணபிரான் (வயது-45) என்பவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி ராணிபேட்டை சி. எம். சி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மரியாதை செலுத்தும் பொருட்டு 20. 08. 2024 இன்று காலை மணியளவில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி