போளூர் அருகே கோர விபத்து - இருவர் உயிரிழப்பு

1564பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை பகுதியில் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிர் திசையில் ஆந்திரா நோக்கிச் சென்ற டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு 10 பேர் கவலைக்கிடம்.

போளூர் அடுத்த குருவிமலை பகுதியில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஜெகன்மோகன் (17) பிரவிளிகா (34) ஆகிய இருவரும் படுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

மேலும் உடன் பயணித்த சாயிக் நயாக் ரசூல் (25) சுஜாதா(28) ஆதிநாராயணா(45) ருசிங்கம்மாள்(42) ஜோதி(35) வரலட்சுமி(55) கோபால்(37) நிர்மலா(40) லலிதா(19) தவிட்டி நாயுடு(38) ஆகிய பத்து நபர்களும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி