விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

77பார்த்தது
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , இன்று (11. 07. 2024) மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்தப் பேரணியில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி